Last Date for Finger Print on Ration Card 2025
தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் (PDS) கீழ் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் AAY (Antyodaya Anna Yojana) மற்றும் PHH (Priority Household) என இரு பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
AAY மற்றும் PHH குடும்ப அட்டையாளர் அனைவரும் தங்களது குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் கைரேகையை 31.05.2025க்குள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வெளியாகி உள்ள தொழில் பழகுநர் வேலைவாய்ப்பு..!

முக்கிய குறிப்புகள்:
- வேறு மாவட்டம்/மாநிலத்தில் வேலை அல்லது கல்விக்காக தங்கியிருப்பவர்கள், தங்களுக்குச் அருகிலுள்ள நியாய விலை கடைக்கு ஆதார் நகலுடன் சென்று e-KYC பதிவு செய்யலாம்.
- நியாய விலை கடையின் இயந்திரத்தில் கைரேகை பதிவு முடியாதவர்கள், அருகிலுள்ள இ-சேவை மையத்தில் ஆதார் கைரேகையை புதுப்பித்து பிறகு e-KYC பதிவு செய்யலாம்.
- பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் கைரேகை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் திரு. கிரேஸ், மாவட்ட மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள AAY மற்றும் PHH குடும்ப அட்டையாளர் அனைவரும் தங்களது குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் கைரேகையை 31.05.2025க்குள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
நீங்கள் நியாய விலை கடையில் உணவுப் பொருட்கள் பெற e-KYC பதிவு மிகவும் அவசியம். காலக்கெடுவுக்கு முன் பதிவு செய்து உங்கள் உரிமையை உறுதி செய்யுங்கள்.
இதுபோன்ற பயனுள்ள தகவல்களுக்கு தொடர்ந்து எங்களைப் பின்தொடருங்கள்!
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |