Village Assistant in Tamilnadu Latest News
2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள்
தமிழ்நாடு முழுவதாக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக இருந்த 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை வருவாய் நிர்வாக ஆணையர் எம். சாய்குமார் வழங்கியுள்ளார். அந்த உத்தரவு கடிதம் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
நேர்காணல் மட்டுமே, தேர்வு இல்லை; மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு..!
வட்டார அளவில் அறிவிப்பு வெளியீடு அவசியம்

காலியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகள் தொடரும் வகையில், ஒவ்வொரு வட்டாரத்திலும் செய்தித் தாள்களின் வாயிலாக பணியிடங்கள் குறித்து விளம்பரங்கள் வெளியிட வேண்டும். இந்த அறிவிப்பு ஜூலை மாத முதல் வாரத்துக்குள் முடிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பம் பெறும் காலக்கெடு மற்றும் தேர்வு அறிவிப்பு

அறிவிப்பு வெளியான 30 நாள்களுக்குள் விண்ணப்பங்களை பெற வேண்டும். கிராம உதவியாளர் பதவிக்குத் தேர்வாகும் நபர்கள் வாசிக்கும் மற்றும் எழுதும் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும். தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட 10 நாட்களுக்குள் தேர்வுக்கு அழைப்புக்கடிதம் அனுப்பப்பட வேண்டும்.
வாசிப்பு மற்றும் எழுத்துத் தேர்வுகள்
அனைத்து தகுதியான விண்ணப்பதாரர்களுக்கும் தேர்வு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பிறகு, 21 நாட்களுக்குள் வாசிப்பு மற்றும் எழுத்துத் தேர்வுகள் நடத்த வேண்டும். தேர்வுகள் முடிந்த பின், 15 நாட்களுக்குள் நேர்முகத் தேர்வும் நடைபெற வேண்டும்.
இறுதி கட்ட நடவடிக்கைகள்
நேர்முகத் தேர்வுக்குப் பிறகு தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்படும். இந்த பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர்கள் அவசியமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கல்வி வேலைவாய்ப்பு | |
WhatsApp Group | Click here |
Telegram | Click here |